காலாண்டு தேர்வு 2024 விடுமுறை எத்தனை நாட்கள்... தேர்வு அட்டவணை எப்போது?

காலாண்டு தேர்வு 2024 விடுமுறை எத்தனை நாட்கள்... தேர்வு அட்டவணை எப்போது?


தமிழகத்தில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியின் படி, வரும் செப்டம்பர் மாத இறுதியில் காலாண்டு தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து வினாத்தாள் தயாரிக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அளவில் மேற்கொள்வர். இதையொட்டி பிரத்யேக ஆசிரியர்கள் குழு நியமிக்கப்பட்டு அவர்கள் ஒன்றிணைந்து வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபடுவர்.இது அனைத்து பள்ளிகளுக்கும் போதிய எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும். இது தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் காலாண்டு தேர்வு கால அட்டவணை, விடுமுறை நாட்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முடிய இன்னும் 4 நாட்கள் தான் இருக்கின்றன. அதன்பிறகு செப்டம்பர் மாதம் தொடங்கிவிடும். இம்மாதத்தில் இரண்டு நாட்கள் அரசு விடுமுறை வருகிறது.

செப்டம்பர் 7 சனி - விநாயகர் சதுர்த்தி,

 செப்டம்பர் 16 திங்கள் - மிலாடி நபி

இந்த மிலாடி நபி விடுமுறை முடிந்த 4வது நாளில் காலாண்டு தேர்வு அல்லது முதல் பருவத் தேர்வு தொடங்குகிறது. 

1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படும்.

 முதல் நாள் செப்டம்பர் 20 வெள்ளிக்கிழமை அன்று முதல் பாடத்திற்கான காலாண்டு தேர்வு நடைபெறுகிறது. அடுத்த இரண்டு நாட்கள் வார விடுமுறை வருகிறது.இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 23 திங்கள் அன்று அடுத்த பாடத்திற்கு தேர்வு நடத்தப்படும். இந்த ஒருவாரத்தில் அனைத்து தேர்வுகளும் நடத்தி முடிக்கப்படும். 

செப்டம்பர் 28 சனி அன்று கடைசி தேர்வு நடத்தப்படும். இதையடுத்து காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்கிவிடும். வழக்கமாக ஒரு வாரம் விடுமுறை கிடைக்கும். 

ஆனால் இம்முறை 4 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது.அதன்படி, 

செப்டம்பர் 29 ஞாயிறு, 

செப்டம்பர் 30 திங்கள், 

அக்டோபர் 1 செவ்வாய், 

அக்டோபர் 2 புதன், 

அக்டோபர் 3 வியாழன் ஆகியவை ஆகும்.

 இதில் ஒருநாள் வார விடுமுறை வந்து விடுகிறது. 

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என்பதால் அரசு விடுமுறை. அப்படி பார்த்தால் வெறும் 2 நாட்கள் மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறை அமைகிறது. பள்ளிக் கல்வித்துறை நாட்காட்டியின் படி இரண்டாம் பருவத்திற்கு.  

காலாண்டு தேர்வு 2024 விடுமுறை எத்தனை நாட்கள்... தேர்வு அட்டவணை எப்போது?

தமிழகத்தில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியின் படி, வரும் செப்டம்பர் மாத இறுதியில் காலாண்டு தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து வினாத்தாள் தயாரிக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அளவில் மேற்கொள்வர். இதையொட்டி பிரத்யேக ஆசிரியர்கள் குழு நியமிக்கப்பட்டு அவர்கள் ஒன்றிணைந்து வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபடுவர்.இது அனைத்து பள்ளிகளுக்கும் போதிய எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும். இது தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். 


இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் காலாண்டு தேர்வு கால அட்டவணை, விடுமுறை நாட்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முடிய இன்னும் 4 நாட்கள் தான் இருக்கின்றன. அதன்பிறகு செப்டம்பர் மாதம் தொடங்கிவிடும். இம்மாதத்தில் இரண்டு நாட்கள் அரசு விடுமுறை வருகிறது.செப்டம்பர் 7 சனி - விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் 16 திங்கள் - மிலாடி நபி. இந்த மிலாடி நபி விடுமுறை முடிந்த 4வது நாளில் காலாண்டு தேர்வு அல்லது முதல் பருவத் தேர்வு தொடங்குகிறது. 


ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படும். முதல் நாள் செப்டம்பர் 20 வெள்ளிக்கிழமை அன்று முதல் பாடத்திற்கான காலாண்டு தேர்வு நடைபெறுகிறது. அடுத்த இரண்டு நாட்கள் வார விடுமுறை வருகிறது.இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 23 திங்கள் அன்று அடுத்த பாடத்திற்கு தேர்வு நடத்தப்படும். இந்த ஒருவாரத்தில் அனைத்து தேர்வுகளும் நடத்தி முடிக்கப்படும். செப்டம்பர் 28 சனி அன்று கடைசி தேர்வு நடத்தப்படும். இதையடுத்து காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்கிவிடும். வழக்கமாக ஒரு வாரம் விடுமுறை கிடைக்கும். ஆனால் இம்முறை 4 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது.

அதன்படி, செப்டம்பர் 29 ஞாயிறு, செப்டம்பர் 30 திங்கள், அக்டோபர் 1 செவ்வாய், அக்டோபர் 2 புதன், அக்டோபர் 3 வியாழன் ஆகியவை ஆகும். இதில் ஒருநாள் வார விடுமுறை வந்து விடுகிறது. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என்பதால் அரசு விடுமுறை. அப்படி பார்த்தால் வெறும் 2 நாட்கள் மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறை அமைகிறது. பள்ளிக் கல்வித்துறை நாட்காட்டியின் படி இரண்டாம் பருவத்திற்கு  அக்டோபர் 3 வியாழன் பள்ளிகள் திறக்கப்படும்.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts